Friday, 10th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

புயல் மழைக்கு பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம்: பிரதமர்

ஏப்ரல் 17, 2019 10:06

புது டெல்லி: ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் நேற்று புயல் தாக்கியது. அதனைத் தொடர்ந்து பலத்த மழை பெய்தது.  

இதன் காரணமாக ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் சாலைகள், மரங்கள், மின்கம்பங்கள் ஆகியவை சேதமடைந்தன. இந்த புயல் மழையில் சிக்கி 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.   

இதேபோல் மத்தியபிரதேசம், குஜராத் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்தது. இந்த புயல் மழைக்கு 19  பேர் பலியாகினர்.  

இந்த புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். மேலும் இந்த புயல் மழையால் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்" என மோடி கூறியுள்ளார். 

 

தலைப்புச்செய்திகள்